2019 ஆம் ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் தேசிய தேர்வு முகாமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களா? சிசிடிவி கேமரா பதிவுகள் இல்லை, விண்ணப்பங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இந்த ஆண்டும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்.
ஆள் மாறாட்ட வழக்கில் பல மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு அமைப்பு கேட்கும் அனைத்து விவரங்களையும் வழங்கினால் தானே விசாரிக்க முடியும்.
தேசிய தேர்வு முகமை வழங்கிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய உத்தரவு